Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை அள்ள முடியுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

அதிர்ஷ்டம் இருப்பவன் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்ம் இல்லாதவன் பொன் விற்றாலும் நஷ்டத்தில் விற்பான் என்பார்கள்.

ஒரு ஊரில் சோமு என்பவன் இருந்தான். தன் நண்பனிடம் பண உதவி கேட்க அக்கரையில் இருக்கும் தன் நண்பனின் வீட்டுக்கு செல்ல நினைத்தான். அன்று என்னவோ ஆற்றில் வெள்ளம் அதிகமாகவே இருந்ததால் அக்கரைக்கு செல்ல முடியாமல் தவித்தான். வெள்ளம் நின்றவுடன் செல்லலாம் என காத்திருந்தான். இப்படி காத்திருந்து காத்திருந்து மாலை பொழுதே வந்துவிட்டது. இருந்தாலும் பொறுமையாக காத்திருந்தான். இரவும் வந்துவிட்டது.

வந்த வேலை முடியாமல் வீட்டுக்கு செல்ல விரும்பாத சோமு, எப்படியாவது நண்பனை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றங்கரையிலேயே ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டான்.

அந்த இடத்தில் நிறைய கற்கள் குவிந்து கிடந்தது. பொழுது விடியும் வரை இந்த கற்களை ஆற்றில் வீசி, பொழுதை கழிக்கலாம் என்று எண்ணி, ஒவ்வொரு கல்லாக ஆற்றில் வீசியபடி இருந்தான்.

குவிந்து இருந்த கற்கள் அனைத்து தீர ஆரம்பித்தது.

மறுநாள் – சூரியன், மெல்ல மெல்ல வானத்தில் உதிக்க தொடங்கியது. பொழுது விடிந்து நல்ல காலை வெளிச்சம் தோன்றியது. சோமு தன் கையில் இருந்த கடைசி கல்லையும் விரக்தியாக பார்த்தான். அது சூரிய ஒளிப்பட்டு பளபளவென கண் கூசியது. ஏதோ கவனத்தில் வேகமாக அதையும் ஆற்றில் வீசி எறிந்தான். அந்த கடைசி கல்லை வீசி எறிந்த பிறகுதான் அவன் திடுகிட்டான். காரணம், இரவு முழுவதும் அவன் ஆற்றில் வீசி எறிந்த கற்கள் அனைத்தும் வைர கற்கள்.

அதிர்ந்து போனான். “அய்யோ” என்று கதறினான். “இரவு முழுவதும் தன் அருகில் இருந்தது வைர குவியல். அது தெரியாமல் இருளும் – விதியும் கூட்டு சேர்ந்து நம் கண்ணை மறைத்ததே” என தன் துரதிர்ஷ்டத்தை நினைத்து அழுதான்.

இப்படி, உலகில் எல்லா செல்வங்களும் குவிந்து கிடக்கிறது. அதை அனுபவிப்பதற்குதான் அதிர்ஷ்டம் வேண்டும். இதைதான் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்  என்பார்கள் பெரியவர்கள்.

அதிக அளவு பணம் புரளும் துறையாக, நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக இருக்கின்ற ஷேர் மார்க்கெட் என்கிற பங்கு வர்த்தகத்தில் யார் லாபம் அள்ளுகிறார்கள்?. அவற்றுக்கு ஜோதிட ரீதியாக உதவும் கிரகங்கள் எவை? என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

Bhakthi Planetஷேர் மார்க்கெட்டில் லாபம் அடைய முதலில் ஒருவரின் ஜாதகத்தில் குரு நன்றாக அமைந்து இருக்க வேண்டும். குரு பகவான், தனகாரகன் ஆவார். ஆகவே குரு, ஒருவரின் ஜாதகத்தில் நல்ல ஸ்தானத்தில் அமைந்தால்தான் லாபத்தை கொடுப்பார்.

உச்சம் பெற்ற குரு

குறிப்பாக, ஜாதகத்தில் குரு தனஸ்தானத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் அதாவது, மிதுன லக்கினத்திற்கு 2-ம் வீட்டில் உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது விருச்சிக லக்கினமாக இருந்து 9-ல் உச்சம் பெற்று இருந்தாலும், மீன லக்கினமாக இருந்து பஞ்சம ஸ்தானம் என்கிற அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிற 5-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெறுவர்.

அல்லது, குருவோடு தனாதிபதியோ அதாவது லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியோ, பஞ்சமாதிபதி என்கிற 5-ம் அதிபதியோ அல்லது, பாக்கியாதிபதி என்னும் 9-ம் அதிபதியோ சேர்ந்து, லக்கினத்திற்கு 2-ல், 5-ல், 9-ல் இருந்தாலும் பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைவர்.

உதாரணமாக, கன்னி லக்கினமாக இருந்து குரு சிம்மத்தில் தனித்து இருந்தாலும் லாபம் அடையலாம். உச்சம் பெற்ற கடக குரு, ஆட்சி பெற்ற மீன – தனுசு குருவும், எதிர்பார அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய 5-ம் ஸ்தானத்தை பார்வை செய்தாலும் ஷேர் மார்க்கெட்டில் யோகம் உண்டு.

முக்கியமாக ஜாதகத்தில் 5-ம் இடம், 9-ம் இடம் வலுத்து இருக்க வேண்டும்.  கும்ப லக்கினமாக இருந்து லக்கினாதிபதி சனி, தனாதிபதி குருவுடன் இணைந்து “புஷ்கலயோகம்” அடைந்தாலும், இந்த கூட்டு கிரகங்கள் 2-ல், 5-,ல் 9-,ல் 11-ல் இருந்தாலும் தன லாபமே.

நீச்சம் பெற்ற குரு

மகரத்தில் குரு நீச்சம் பெற்று இருந்தாலும், பங்கு சந்தையில் பணம் ஈட்டலாம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம் இவை அத்தனையும் அமைந்திருந்தாலும், நடக்கும் திசை யோக திசையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Feb 23 2013. Filed under செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech